யாழ் டோனி ரசிகர் மன்றத்தின் முன்மாதிரியான செயல்பாடு

டோணி இந்திய அணிக்காக ஆட ஆரம்பித்து 15 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்றத்தினர் இன்று 22.12.2019 வெகு விமர்சையாக கொண்டாடினர்.

காலை 9 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும் தொடர்ந்து கைதடி சாந்தி முதியோர் இல்ல முதியோருக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்றத்தினர் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இவ்வாறான நற்செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.