கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுகழக 'கற்பகசமர்' அரையறுதி போட்டிகள் நாளை

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடர் யாழ் அணிகளின் ஆதிக்கத்துடன் அரையிறுதிவரை நகர்ந்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகளில் யாழின் முன்னனி அணிகளுடன் தனியொரு அணியாக கிளி மண்ணின் வலைப்பாடு ஜெகமீட்பர் அணி மோதவுள்ளது. அந்தவகையில் நாளை பி.ப 5.30மணி முதல் செல்சிற்றி மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகளின் வரிசையில்
*ஞானமுருகன் (யாழ்) எதிர் ஜெகமீட்பர்(கிளி)
*பாடுமீன்(யாழ்) எதிர் அன்ரனிஸ்(யாழ்)
போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள yarlsports உடன் இணைந்திருங்கள்...

No comments

Powered by Blogger.