ஞானம்ஸ் பெயின்ட் தொடர் வெளியேற்றும் போட்டி இன்று

ஞானம்ஸ் பெயின்ற் நிறுவனத்தினர் யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக புற்தரை ஆடுகளத்தில் நடாத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரின் முதலாவது வெளியேற்றும் போட்டி  இன்று பி.ப 1மணிக்கு புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது போட்டியில் குழு'A' யில் 2ம் இடம் பிடித்த கிறாஸ்ஹோப்பர்ஸ் அணியினை எதிர்த்து குழு'B' யில் 2ம் இடம் பிடித்த  பற்றீசியன்ஸ் அணி மோதுகின்றது. மேற்படி போட்டியில் வெற்றிபெறும் அணி 2வது தகுதி போட்டிக்கு தகுதிபெறும் அதேவேளை தோல்வியடையும் அணி தொடரல் 4ம் இடத்தினை பெற்று தொடரில் இருந்து வெளியேறும். இரண்டு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.